தமிழ்

பட்டிமன்றம் – சொற்போர்

  • ஆன்றோரும் சான்றோரும் நிறைந்த அவையில் அழகுத்தமிழில் ஆழ்ந்த இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த தலைப்புகளில், இரு பிரிவினரிடையே நடக்கும் இதமான சொற்போரே பட்டிமன்றம்.
  • தலைப்பு சார்ந்து வாதிடுதலே பட்டிமன்றத்தின் தலையாய நோக்கம்.
  • தலைப்பைச் சார்ந்தும் ஆதரித்தும் தலைப்பின் மையக்கருத்தை மறுதலித்தும் எவ்வித தளர்வுமின்றி தன் தலைப்பு சார்ந்து வாதிடுதலே சிறந்த பட்டிமன்றம்.
  • நலம் பயக்கும் நகைச்சுவையும் நளினமான ஏளனமும் கலந்து வாதிடும் சொல்லாடலாகிய பட்டிமன்றம் இருகரம் கூப்பி இனிதே வரவேற்கப்படுகிறது.

COMING SOON

  • ஒரு முதன்மை அணிக்கு 1 குழு
  • ஒவ்வொரு குழுவிலிருந்தும் நான்கு நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்கள் மட்டுமே வாதிட அனுமதி வழங்கப்படும்.
  • பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

கவித்தோப்பு

இளைய பாரதிகளே! இசை தமிழில் கவி படைத்து, செவி நிறைய தான் படித்து, ஓங்கு புகழ் தமிழ் வளர்க்க வருக! வருக! தீந்தமிழில் தான் கவிதை தருக.. தருக..

போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்கும் நேரத்தில் அறிவிக்கப்படும்.

  • கவிதை துளிப்பா (ஹைக்கூ), புதுக்கவிதை, மரபுக்கவிதை என எதுவாகவும் இருக்கலாம்.
  • கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
  • 6 அணிகள் இடம்பெறலாம்.
  • குழுவிற்கு 2 மாணவர்கள் வீதம் போட்டியில் பங்குபெறலாம்.
  • கவிதை எழுத கால அளவு 60 மணித்துளிகள் வழங்கப்படும்.
  • போட்டியின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் எழுதிய கவிதையை படித்து காட்ட வேண்டும்.